9 Nov 2018

போரதீவுப் பற்றில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்றும் துரித நடவடிக்கை

SHARE
தாழ் நிலங்களில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெட்டி வெளியேற்றும் நடவடிக்கை மும்முரப் படுத்தப்பட்டுள்ளதாக போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் ரஜனி தெரிவித்தார்.
மழை வெள்ளத்தில் தேங்கி நிற்கும் நிரை வெளியேற்றுவது தொடர்பில் வெள்ளிக்கிழமை (09) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தற்போது பெய்து கொண்டிருக்கும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள அனைத்து தாழ் நிலங்களும் மழை நீரால் மூடப்பட்டுக் காணப்படுகின்றன. இவற்றை விட தாழ் நிலங்களில் வாழும் மக்களின் குடியிருப்புக்களும், வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு எமது போரதீவுப் பற்று பிரதேச சபையின் மூலம் தேங்கி நிற்கும் நீரை வெட்டி ஆற்றுப்பகுதி நோக்கி வெளியேற்றும் நடவடிக்கை மும்முரமாக இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று எல்லைகுட்பட்ட தாழ்வான பகுதிகளிலுள்ள, முனைதீவு, பட்டாபுரம், பழுகாமமம் கோவில்போரதீவு, வேத்துச்சேனை போன்றன பல கிராமங்களில் மழை நீர் நிரம்பியுள்ளன. இவற்றால் அக்கிராமங்களிலுள்ள உள் வீதிகளிலும் முற்றாக நீர் நிரம்பியுள்ளதனால் கிராமங்களுக்குள்ளேயே மக்கள் போக்குவரத்து செய்வதில் மிகுந்த கஷ்ட்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலமையைக் கருத்தில் கொண்டு பிரதேச சபையின் செயற்பாடுகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: