மாநகர மற்றும் மேல்மகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் கலாநிதி பொன்னையா சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பொறியியலாளர் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான கலாநிதி பொன்னையா சுரேஷ் அவர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளராக தனது அரச பணியை ஆரம்பித்து பின்னர் இலங்கை பொறியியலாளர் சேவையில் இணைந்து மத்திய மாகாண சபையில் பல பதவிகளை வகித்ததுடன் மத்திய மாகாண சபையின் பொறியியல் சேவைப் பணிப்பாளராகவும் , சமூக அபிவிருத்தி அமைச்சின் சீடா (ளுஐனுயு) செயற்திட்டத்தின் ஆலோசகராகவும் பணியாற்றிய காலத்தில் மத்திய மாகாணத்தில் பல பாடசாலைகள் உட்பட பல்வேறு அபிவிருத்திப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர் என்பதுடன் பின்னர் நீதி அமைச்சில் பொறியியல் சேவைப் பணிப்பாளராகவும் , நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றில் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியதுடன் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment