கொட்டும் மழையிலும் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக மட்டக்களப்பு மாவடி முன்மாரி துயிலும் இல்லத்தில் அனுஸ்ட்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவு.
கார்த்திகை 27 வடக்கு கிழக்கில் அமைந்துள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும், மாவீரர் நாள் நடைபெற்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவடி முன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் ஈகைச் சுடர் ஏற்றி மாவீரர் நாள் அனுஸ்ட்டிக்கப்பட்டது.
இதன்போது பொதுச் சுடரை மாவீரர் ஒருவரின் தாய் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், உள்ளிட்ட பலரும், வரிசையாக நின்று ஏனைய சுடர்களை ஏற்றி வைத்தனர்.
கொண்டும் மழையையும் பொருட்படுத்தாது அழுது புரண்டு கொண்டு தமது பிள்ளைகளை நினைவு கூர்ந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment