9 Nov 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொட்ரந்து வெள்ளம் பல வீதிகளின் போக்குவரத்து பாதிப்பு. மக்கள் அவதி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 
பட்டிருப்பு – பெரிபோரதீவு பிரதான வீதி பெரியபோரதீவு பழுகாமம் பிரதான வீதி, வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, மண்முனை – கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, மாடிமுன்மாரி – தாந்தாமலை பிரதான வீதி, வலையிறவு - வவுணதீவு பிரதான வீதி, மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான வீதி, போன்ற பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதனால் இவ்வீதிகளில் போக்குவரத்து மார்க்கங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்ககொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்த மழை பெய்து வருவதனால் தாழ் நிலங்களில்  அமைந்துள்ள முனைத்தீவு, பட்டாபுரம், பெரியபோரதிவு, பழுகாமம், உள்ளிட்ட பல கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளிக்கிழமை (09) காலை 8.30 மணிவரையில் மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் 75.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில 44.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 79.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளிப் பகுதியில் 67.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 85.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 38.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 35.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 13.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில 45.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 140.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கதிரவெளிப் பகுதியில் 19.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிரலயத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் மேலும் தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: