12 Nov 2018

போரதீவுப் பற்று சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கும், மாணவர்களுக்கும் உதவி.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் அப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 30 மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களும், 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், 3 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (11) வெல்லாவெளியில் இடம்பெற்றது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் சிவில் அமைப்பின் தலைவர் வ.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலயத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் (மலேசியா) தலைவர் பா.கு.சண்முகம், பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலியின் ஸ்தாபகர் வி.சு.செல்வராசா, கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ப.கோணேஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் கே.ஜீவராசா சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மற்றும் யனாளிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
பிராஞ்சில் வசிக்கும் சரவணையூர் பூமணியம்மா அறக்கட்டளை நிலையத்தின் நிதியுதவியில் இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.























SHARE

Author: verified_user

0 Comments: