கணித விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), களுவாஞ்சிகுடி மாணவர்கள் இரண்டாம் இடம்.
மட்.பட்.துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் உயர்தர கணித , விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பட்டிருப்பு வலய பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட கணித விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), களுவாஞ்சிகுடி மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு பாடசாலை பிரதி அதிபர் எம்.சுபேந்திரராஜா சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.
இம்மாணவர்களுக்கு 5000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இப்போட்டியில் இப்பாடசாலையைச் சேர்ந்த ஆர். கோமேதகி (தரம் 6), ரீ.அபிஸ்க்சன் (தரம் 7), ரீ.டஸ்மிதன் (தரம் 8) , ஈ.பிரியா (தரம் 9), கே.ரோமியா (தரம் 10), என.கிருந்திகரன் (தரம் 11) ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment