5 May 2016

மட்டு 38ம் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை.

SHARE
(பழுவூரான்)

மட்டு மாவட்டத்தில் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை 38ம் கிராமத்திலுள்ள 5ம் வட்டாரத்தில் இனந்தெரியாத நபர்களினால் திக்கோடையைச் சேர்ந்த லோகிசன் என்பரிவன் மோட்டார் சைக்கிள் நேற்றிரவு(04) தீயிட்டு முற்றாக எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,                        
நேற்றிரவு(04.05.2016) திக்கோடையைச் சேர்ந்த லோகிசன் என்பவர் 38ம் கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு இரவு 9.30 மணிக்கு சென்று வயல் வேலைகளை முடித்து விட்டு வந்தபார்த்த போது மோட்டார் சைக்கிளை (ஹங்) காணவில்லை. அவர் மண்டூர் பொலிசில் சென்று முறைப்பாட்டினை பதிவு செய்தார். பின்பு 38ம் கிராம 5ம் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள் எரிவதை பார்த்த  கிராமவாசிகள் கிராம சேவையாளரிடம் கூறிய போது அவர் உடனடியாக பொலிசாரிடம் தகவலை கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.









SHARE

Author: verified_user

0 Comments: