25 Apr 2016

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி வெற்றி நாதம் இணையத் தளத்துடன் தொடர்பு என்கிறார் ஜனா - வீடியோ

SHARE
தமிழ் மக்கள் மத்தியில் வாக்குகளை சூறையாடுவதற்காக ஊடுருவியுள்ள புல்லுருவிகள் தொடர்பில் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் கவனமாக செயற்படவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புதுவருட கலாசார விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இவ்வாறான கலாசார நிகழ்வுகளை நடாத்தும் போது பெருமளவான புலனாய்வாளர்கள் ஊடுருவி புலனாய்வு செயற்பாடுகளில் ஈடுபடும் காலம் இருந்தது.
எனினும், அந்த நிலை மாறி நாம் அனைவரும் சந்தோசமான முறையில் எமது நிகழ்வுகளை நடாத்தும் வகையில் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2015ம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களை கொன்றொழித்த ஆட்சியை வடகிழக்கு தமிழினம் மாற்றி, புதிய ஆட்சியொன்றை இந்த நாட்டில் ஏற்படுத்தியது.
அதுபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினை எதிர்க்கட்சியாகவும் அதன் தலைவரை எதிர்க்கட்சி தலைவராகவும் உருவாக்கியுள்ளோம்.
புரையோடிப் போயுள்ள எமது இனப்பிரச்சினைக்கு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுடனான நிரந்தர தீர்வினை எட்டக்கூடிய ஒரு சூழ்நிலையில் உள்ளோம்.
வடகிழக்கில் கணிசமான ஆசனங்களை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தாலும் ஒருசில ஆசனங்களை தவறவிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (tw)
SHARE

Author: verified_user

0 Comments: