தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஆரையம்பதியில்
இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூ. பிரசாந்தன் ஆகியோர் தமக்கு பிணை வழங்கக் கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்காக இவர்கள் இருவரும் வியாழக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களது பிணை கோரிய மனு மீதான வழக்கை எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி. சந்திரமணி அறிவித்தார்.
0 Comments:
Post a Comment