6 Sept 2015

கிழக்கு மாகாண சபைக்கு விரைவில் புதிய உறுப்பினர்கள் நியமனம்

SHARE
எட்டாவது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் விருப்பு வாக்குகள் பட்டியலில் அடுத்த

நிலையிலுள்ள உறுப்பினர்கள் நியமிக்கப்படலாமென கிழக்கு மாகாண சபையின், பேரவை செயலாளர் எம்.சீ.எம்.சரீப் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட அலிசாஹிர் மௌலானாவின் இடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் வெற்றி பெற்ற தயா கமகேயின் இடத்திற்கு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள கே.சில்வா நியமிக்கப்படலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பில் வெற்றி பெற்ற விமலவீர திசாநாயக்காவின் இடத்திற்கு எஸ்.தேவரப்பெரும நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வெற்றிபெற்ற இம்ரான் மஹ்ரூபின் இடத்திற்கு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள எம்.ஏ.எம்.மஹ்ரூப்பும் நாடாளுமன்றதிற்கு தெரிவாகியுள்ளதால் அதற்கு அடுத்த நிலையிலுள்ள எம்.அருண நியமிகப்படுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த நியமனங்கள் கட்சிகளின் செயலாளர்களினாலேயே மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: