18 Sept 2015

திருமலை சிவன்கோவில் கோபுர அடிக்கல் நாட்டும் விழா

SHARE
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள சிவன் கோவிலின் புனர்நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நுழைவாயில் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருக்கள் ரவிச்சந்திர குருக்கள் மற்றும் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: