நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளரும் மூதூர் தொகுதியின் பிரதான அமைப்பாளரும் வேட்பாளருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப் தெரிவித்தார்.
கந்தளாயில் சனிக்கிழமை (25) மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஜனவரி எட்டாம் திகதி மக்கள் எவ்வாறு தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்களோ, அதேபோன்று எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் கூடுதலான ஆசனங்களை கைப்பற்றி ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். தற்போது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே' என்றார்.
0 Comments:
Post a Comment