11 Aug 2026

வீதி விபத்துக்களை தடுக்கும் செயற்பாடு மட்டக்களப்பில் முன்னெடுப்பு.

SHARE

வீதி விபத்துக்களை தடுக்கும் செயற்பாடு மட்டக்களப்பில் முன்னெடுப்பு.

மட்டக்களப்பு  மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக நெடுஞ்சாலை போக்குவரத்து விசேட வீதி  பரிசோதனைகள் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன.

இதற்கமைய இன்றயதினம் செவ்வாய்கிழமை(11.08.2026) மட்டக்களப்பு கொழும்பு நடுஞ்சாலை பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் பரிசோதனைக்கு போக்குவரத்துப் பொலிசாரால் விசேட வீதி  பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது வீதி ஒழுங்கு சட்டங்களை மீறிய வாகனங்கள் மற்றும் அதிக வேகத்துடன் பயணித்த வாகனங்கள,; மோட்டார் சைக்கிள்கள், போன்றளன. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், உரிய வாகன ஆவண பத்திரம் இன்றி பயணித்த வாகன சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.








SHARE

Author: verified_user

0 Comments: