உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றோர் வேட்பு மனுக்களை உரிய
காலத்தின் கையளிக்க வேண்டும் -மட்டு தேர்தர் தெரிவத்தாட்சி அதிகாரி.
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் சுயேச்சை குழுக்கள் வேட்பு மனுக்களை உரிய காலத்தின் கையளிக்க வேண்டும். வேட்பு மனுக்களில் 50 விதமான பெண்களின் பங்களிப்பும், 25 விதமான இளைஞர்களின் பங்களிப்பும், இருக்க வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி யுலேக்கா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை(15.03.2025) மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கள நிலவரம் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் சுயேச்சை குழுக்கள் தமது வேட்பு மனுக்களை உரிய காலத்தின் கையளிக்க வேண்டும். இதன்போது வேட்பு மனுக்களில் 50 விதமான பெண்களின் பங்களிப்பும் 25 விதமான இளைஞர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் எனவும், மாவட்டத்தில் ஒரு மாநகர சபை இரண்டு நகர சபைகள், மற்றும் 9 பிரதேச சபைகளுக்கான, தேர்தல் முன்னெடுக்கப்பட உள்ளன. அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் தேர்தல் அலுவலகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்வோர் இறுதிவரை
காத்திடாமல் தங்களது வேட்பு மனுக்களை நேரகாலத்துடன் தாக்கல் செய்யவும், மாவட்டத்தில்
அமைதியான தேர்தலை முன்னெடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.என அவர்
இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment