30 Jul 2023

அம்பிளாந்துறையில் இடம்பெற்ற நடமாடும் சேவை.

SHARE

அம்பிளாந்துறையில் இடம்பெற்ற நடமாடும் சேவை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுனரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு - பட்டிபளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(29.07.2023) அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் மாபெரும் நடமாடும் சேவை இடம்பெற்றது.

இதன் போது பதிவாளர் கிளையின் சேவைகள்அடையாள அட்டை வழங்கும் சேவைகள்காணி தொடர்பான சேவைகள்சமூர்த்தி மற்றும் கிராம சேவகர் தொடர்பான சேவைகள்,ஆயுள்வேத மருத்துவம்,  ஏனைய மருத்துவ சேவைகள் என்பன பொதுமக்களுக்கு வழங்கப்பட்டனஇச்சேவையின் மூலமாக அப்பகுதிவாழ் பொதுமக்கள் பலர் நன்மை அடைந்தார்கள்.

இதன்போது அப்பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திருமதிமேனகா புவிகுமார்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிவைத்தியர்கள்ஏனைய திணைக்களகங்களின் அதிகாரிகள்மற்றும் உத்தியோகஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மக்களுக்கு அதே இடத்தில் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தமை சிறப்பம்சமாகும்.


 

 






















SHARE

Author: verified_user

0 Comments: