மட்டு.மாவட்டத்தில் அமைதியான முறையில் க.பொ.த.உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம் -9451 பரீட்சார்த்திகள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2021ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சைகள் பரீட்சை திங்கட்கிழமை(07) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளதாக வலய கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் 71 பரீட்சை நிலையங்களில் 9451 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.8
இணைப்பு பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. பரீட்சை நிலையங்களுக்கு பாரிய பொலிஸ்
பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
4317 பெண் பரீட்சார்த்திகளும் 4134 ஆண் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுவதாக
பரீட்சைக்குப் பொறுப்பான மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி கே.சுஜாதா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment