13 Apr 2021

வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் மிக முக்கியமான வீதிகள் புணர் நிர்மாணம்.

SHARE

வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் மிக முக்கியமான வீதிகள் புணர் நிர்மாணம்.

வீதி பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் இருக்கின்ற ஒரு லட்சம் கிலோ மீற்றர் வரையிலான வீதிப் புனரமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கிராமத்தில் உள்ள 1.7 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வீதி, மற்றும் 2 கிலோ மீற்றர் நீளம் கொண்ட ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் கோவில் வீதிக்குரிய ஆகியவற்றுக்கான புணர் நிருமான வேலைகள் திங்கட்கிழமை(12) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதன்போது கலந்து கொண்டு வீதியின் புணரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் சிவகுமார் மற்றும் பிரதான பொறியியலாளர் பரதன் நிறைவேற்று பொறியியலாளர் சசிநந்தன் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகராசா கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: