24 Mar 2021

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்திற்கு கெளரவம்

SHARE

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றத்திற்கான வலையமைப்பு மற்றும் Leo club of Cecilian's ஆகியன இணைந்து "ஆளுமை மிக்க தலைமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் ஒரு நிகழ்வினை நடாத்தியது. ஆளுமை மிக்க தலைமைத்துவத்துடன் பல துறைகளில் தலைமைத்துவத்தில் உள்ள பெண்களை கௌரவிப்பதும், பெண்பிள்ளைகளை ஊக்குவிப்பதும் இந் நிகழ்வின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் அவர்களுக்கு ஆளுமை மிக்க தலைமைத்துவம் எனும் பாராட்டு சின்னம் இவ் வலையமைப்பினரால் இன்று (24) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் ஏற்கனவே மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ந. சத்தியானந்தி, மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு செயலாளர் மங்களேஸ்வரி சங்கர், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் ஆகியோருக்கும் மாற்றத்திற்கான வலையமைப்பினரால் ஆளுமை மிக்க தலைமைத்துவம் எனும் பாராட்டு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: