மட்டு.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன.
யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை இடித்து அகற்றியதைக் கண்டித்தே திங்கட்கிழமை (11) வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஹாத்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்படடிருந்தது
பாடசாலைகளுக்க ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும் மாணவர்கள் சென்றிருக்கவில்லை..
களுவாஞ்சிகு, ஆரையம்பதி, மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை கொக்ட்டிச்சோலை, உட்பட பல நகரங்களிலும் கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் அலுவல்களும் ஸ்தம்பித்திதுள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.
0 Comments:
Post a Comment