9 Jan 2021

புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளையின் 123 வது பிறந்த தின நிகழ்வு மட்டக்களப்பில் சிறப்பிக்கப்பட்டது.

SHARE

புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளையின் 123 வது  பிறந்த தின நிகழ்வு மட்டக்களப்பில்  சிறப்பிக்கப்பட்டது.

மண்முனைவடக்கு புளியந்தீவு  சமுர்த்தி வங்கியுடன்  புலவர் மணி நினைவு பணி   மன்றம்   இணைந்த ஏற்பாட்டில் தேசிய  வீரர்  இலக்கிய கலாநிதி  புலவர் பண்டித மணி.  பெரிய தம்பிப்பிள்ளையின்  123 வது  பிறந்த தின  நிகழ்வு வெள்ளிக்கிழமை (08) மட்டக்களப்பு  முதலியார்  வீதி  நினைவு பூங்காவில்  அமைக்கப்பட்டுள்ள புலவர் மணி   பெரிய தம்பிப்பிள்ளையின் உருவச்சிலைக்கு  மலர் மாலை அணிவித்து  சிறப்பிக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் மற்றும்புலவர் மணி நினைவு பணி  மன்ற உறுப்பினர்கள், சமுர்த்தி வாங்கி உத்தியோகத்தர்கள்புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளையின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு  புலவர் மணியின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து 123 வது  பிறந்த தின நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது .

இந்நிகழ்வு தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக  உறுப்பினர்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வு  சிறப்பிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது






   

SHARE

Author: verified_user

0 Comments: