மட்டக்களப்பு சுகாதார அலுவலகத்தினால் 100 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை ஒருவருக்கு தொற்று உறுதி.மட்டக்களப்பு மாவட்;டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையடுத்து பிசீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கல்லடி மீன் சந்தைக் கட்டிடத்தில் இடம் பெற்ற அன்டிஜன் பரிசோதனை முகாமில் தொற்று உறுதியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ளுராட்சி சபைகளில் கடமை புரியும் நகர சுத்தி தொழிலாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோட்டை முனை பொதுசுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
0 Comments:
Post a Comment