ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் தோற்றவுள்ள ஆரையம்பதி பிரதேச்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட எழுதுகோல்கள் வழங்கிவைப்பு.
ஆரையம்பதியிலுள்ள பல சமூக அமைப்புக்களின் ஒற்றுமையோடு சமூக சேவைனோக்கோடு ஒன்றித்து பயணிக்கும் ஆரையம்பதி ஆலயங்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் தோற்றவுள்ள ஆரையம்பதி பிரதேச்தை சேர்ந்த மாணவர்களிற்கான ஆசிர்வதிக்கப்பட்ட எழுதுகோல்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வு ஆரையம்பதி அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் சுப வேளையில் இடம்பெற்றது இந்நிகழ்விலே இவ் அமைப்பின் ஆரம்பகால உருவாக்குனரும் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தற்போதைய தவிசாளருமான மகேந்திரலிங்கம், ஒன்றியத்தின் தலைவர் யோகராசா, செயலாளர் தங்கவடிவேல், அரசடிப்பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா, தேசிய கலைஞர் ஊடகவியலாளர் பத்மசிறி மற்றும், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment