17 Oct 2020

உயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.

SHARE

உயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலிலுள்ள ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று வெள்ளிக்கிழமை (16.10.2020) இரவு மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து புதிய காத்தான்குடி றிஸ்வி நகரில் வைத்து குறித்த  மீட்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2019 ஏப்ரல் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மொனறாகலை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் பெயரில் குறித்த வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வேனை மீட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த வேனை செலுத்திய சாரதியொருவரையும் கைது செய்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.







 

SHARE

Author: verified_user

0 Comments: