31 May 2020

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மறைந்த ஊடகவியலாளர் நடேசனின் 16 வது ஆண்டு நினைவு தினம்.

SHARE
கிழக்கு மாகாண  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மறைந்த ஊடகவியலாளர் நடேசனின் 16 வது ஆண்டு நினைவு தினம்.
மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை - நடேசன் அவர்களின் 16 வது நினைவு தின நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை ( 31) கல்லடி வொய்ஸ் ஒவ் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தேவ அதிரன் தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை - நடேசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தப்பட்டு தீபச் சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து அன்னாரது ஆத்மா சாந்திக்காக மௌன அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது சுகாதார முறைகளுக்கு ஏற்றாற்போல் நடாத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர் சங்கத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் சிலரும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 











SHARE

Author: verified_user

0 Comments: