மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பதவியேற்பு.
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா, உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை (27.01.2020) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொதுமக்களின் தேவையை உரிய நேரத்துக்குள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அதற்குத் தேவையான அர்ப்பணிப்பை உத்தியோகத்தர்கள் வழங்கவேண்டுமென, கடமையேற்கும் சந்தர்ப்பத்தில் உத்தியோகத்தர்களிடம் கேட்டுக் கொண்ட கலாமதி, 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை தன்னால் முடிந்தளவு முன்னெடுக்கப் போவதாகவும் கூறினார்.
இவர், கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் உதவி அரசாங்க அதிபராகவும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் பணியாற்றிய பின்னர், கிழக்கு மாகாண சபையில் பிரதி பிரதம செயலாளராக நிர்வாகம், பயிற்சியும் ஆலோசனையும் எனும் பதவிகளிலும், கிழக்கு மாகாண சபையின் பேரவை செயலாளராகவும், ஏற்கனவே பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment