ஆசிரியர்களுக்கு சமாதானமும், நல்லிணக்கமும் வாண்மை விருத்திச் செயலமர்வு.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட 30 ஆசிரியர்களுக்கு சமாதானமும், நல்லிணக்கமும் வாண்மை விருத்திச் செயலமர்வு சனிக்கிழமை (02) மட்.பட்.களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா, தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரேஸ், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் வ.சத்திவேல், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் இதன்போத கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போர்து வளவாளர் ஓய்வு பெற்ற சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் க.தவராசா கலந்து கொண்டு சமாதானமும், நல்லிணக்கமும் தொடர்பாக ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்திச்க் கருர்களுக்துக்களை எடுத்தியம்பினார். புhடசாலை மட்டத்தில் எவ்வாறு நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்வது, ஏனைய இனை மத கல்விச சமூகத்துடன் எவ்வாறு இன ஒன்றுமை, சதமாதானம் தொடர்பான செயற்பாடகளை முன்நெடுத்தல், அதற்கு அதிபர், ஆசிரியர்கள், எவ்வாறு மாணவர்களை தாயர் படுத்துவது. இதற்கு அரச மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தான்னார்வ அமைப்புக்களின் உதவிகளை எவ்வாறு நாடுவது போன்ற பல விடையங்கள் இதன்போது வளவாளரால் ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment