10 Oct 2019

களுதாவளைக் கடலில் அள்ளுண்டுபோன இளைஞன் கிராங்குளம் கடற்கரையில் சடலமாக மீட்பு.

SHARE
களுதாவளைக் கடலில்  அள்ளுண்டுபோன இளைஞன் கிராங்குளம் கடற்கரையில் சடலமாக மீட்பு.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (08) மாலை காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…. 

களுதாவளையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் நண்பர்களாக இணைந்து கடற்கரைக்குச் சென்றுள்ளனர். கடற்கரையில் விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ளனர். இவ்வாறு குளித்துக் கொண்டிருக்கும்போது அருகில்நின்று குளித்துக் கொண்டிருந்த தமது நண்பர் கடலலையில் அள்ளுண்டுபோவதை சக நண்பர்கள் அவதானித்துள்ளனர். 

பின்னர் அருகிலுள்ள கடற்படையினரிடம் அறிவித்துள்ளனர் உடன் இஸ்த்தலத்திற்கு விரைந்த கடற்படையினரால் இளைஞனைக் கண்டுபிடிக்க  முடியவில்லை. இவ்வாறு கடலில் அள்ளுண்டுபோன இளைனை மீனவர்களும், உறவினர்களுமாக கடலில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை (10) மாலை கிராங்குளம் கடற்கரையில் கடலம் ஒன்று தெரிவதை அவதானித்த மீனர்கள் பொலிசாருக்க அறிவித்துள்ளனர். இந்நிலையில் களுதாவளைக் கடலில் காணாமல்போன் இளைஞனின் உறவினர்கள் குறித்த சடலத்தைப் பார்வையிட்டு இது தமது உறவினர்தான் என அடையாளம் காட்டியுள்ளனர். 



SHARE

Author: verified_user

0 Comments: