8 Jun 2018

குளிரூட்டல் வளிச்சீராக்கல் துறை மூலம் ஏற்படுகின்ற சூழல் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு

SHARE
சுற்றாடலைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் குளிரூட்டல் வளிச்சீராக்கல் துறை மூலம் ஏற்படுகின்ற சூழல் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வூட்டும் செயலமர்வு புதன்கிழமை மாலை (06.06.2018) மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள விடுதியில் நடைபெற்றது.
இலங்கைப் பொறியியலாளர் நிறுவகத்தின் கிழக்குப் பீட மட்டக்களப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஓசோன் படை அழிதல், புவி வெப்பமடைதலால் உயிரினங்கள் முகம் கொடுக்கும் சவால்கள் மற்றும் சூழலியல் மாற்றங்கள் பற்றி விழிப்புணர்வூட்டப்பட்டது.

மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரியின் அதிபர் கே. பிறேமரஞ்சன் வளவாளராகக் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

இதன்போது குளிரூட்டிகள், வாயுச் சீராக்கிகளில் பாவிக்கப்படும் வாயுக்கள் பற்றியும் அவை சுற்றாடலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைப் பொறியியலாளர் நிறுவகத்தின் கிழக்கு பீட மட்டக்களப்பு மாவட்ட நிலைய இணைத் தலைவர் எம். ரமணசுந்தரம், இணைச் செயலாளர் வி. துசியந்தன் உள்ளிட்ட அங்கத்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்வில் பங்குபற்றியொருக்கு மரக் கன்றுகளை வழங்கி வைத்தனர்.

வளவாளரான அதிபர் கே. பிறேமரஞ்சன் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு மரக்கன்று ஒன்றை வழங்கி வைத்தார்.

இலங்கைப் பொறியியலாளர் நிறுவகத்தின் கிழக்கு பீட மட்டக்களப்பு மாவட்ட நிலைய முன்னாள் தலைவர் எஸ். ஜயந்தன் வளவாளருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: