12 Sept 2017

கடந்த அரசாங்கம் முப்படைகளின் மூலம் வடக்கு கிழக்கு பகுதிகளில் போதைவஸ்த்து பாவனைகளை விஸ்த்தரித்து இருந்தது – அமைச்சர்

SHARE
கடந்த அரசாங்கம் முப்படைகளின் மூலம் வடக்கு கிழக்கு பகுதிகளில் போதைவஸ்த்து பாவனைகளை விஸ்த்தரித்து இருந்தது. பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ள கடைகளில் படையினரால் போதைவஸ்த்துக்கள் கொண்டு வந்து கொடுக்கப்பட்டு அவை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு எமது மாணவர்கள் அடிமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறான பல கடைகளை நாம் அடையாளம் கண்டு மூடியிருக்கின்றோம். 
என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார இராஜாங்க அமைச்சினூடாக இலங்கைக்கான சீனா தூதரகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கிராமத்திலுள்ள 6 படாடசாலைகளைச ;சேர்ந்த தெரிவு செய்யப்பட 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்.களுதாவளை மகாவிதியாலய கேட்போர் கூடத்தில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இலங்கைக்கான சீனா தூதரகத்தின் பிரதி தூதுவர் திருமதி சாங் உள்ளிட்ட பல கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இராஜாங்க அமைசச்ர் மேலும் தெரிவிக்கையில்…..

போருக்குப் பின்னர் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் பின்னதள்ளப் பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை உள்ளடக்கி செயற்படுகின்றது. ஆனால் எனது அமைச்சினூடாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றோம் யுத்த்திற்குப் பின்னர் கல்வியில் பின்தங்கிய மாகாணமாக வடமாகாணம் விளங்குகின்றது. இதனையிட்டு வெட்கப்படுகின்றோம். எனவே கல்வியில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த அரசாங்கம் எமது பகுதிகளில் கல்வி முதல்  அனைத்து விடையங்களையும ;இஸ்த்தம்பிதப்படுத்தித்தான் செயற்பட்டிருந்தார்கள். மேலும் கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கை வெளிநாடுகளில் காட்டி நிதியைக் கொண்டு வந்து தங்களுடைய மாவட்டங்களைத்தான் அபிவிருத்தி சொய்து கொண்டிருந்தார்கள்.  கடந்த அரசாங்கத்திலிருந்து செய்ற்பட முடியாது என்று அந்த அரசாங்கத்திலிருந்த பல உறுப்பினர்கள் தற்போது ஒதுங்கியுள்ளார்கள்.  அந்த ஆட்சியை மாற்றுவதற்குப் போராடி நல்லாட்சியை தற்போது நாம் கொண்டு வந்துள்ளோம். கடந்த காலத்தில் எமது மண்ணுக்காகப் போராடினோம் இன்று கல்விக்காகப் போராடி வருகின்றோம்.

வடக்கு கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகளில் அதிகளவு வறுமையான மாணவர்கள் இருக்கின்றார்கள் ஆனால் அவை வெளியில் கொண்டு வரப்படுவதில்லை, தற்போது இப்பகுதிகளில் கல்வியை மேம்படுத்த திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். நல்லாட்சிக்காலத்தில் எமது பகுதிகளில் கல்வியை முன்நிலைப்படுத்த வேண்டும்.  இலங்கை அபிவிருதி அடைந்துவரும் நாடாக விளங்குகின்றது. அந்நிலையில் கல்வியை முன்னிலைப்படுத்தினால் எதிர் காலத்தில் சிறந்த தலைவர்களாக இன்றைய சிறுவர்கள் விளங்குவார்கள்.  

கல்வியிரீதியிலும் பெரும்பான்மை இனத்தைச சேர்ந்தவர்களுக்கு ஒரு நியாயம், தமிழர்களுக்கு இன்னொரு நியாமாகத்தான் வழங்கப்பட்டு வருகிகன்றது. எனவே அனைவரும் சமமாகப் பார்க்கப்பட வேண்டும். ஆனாலும் இனவாதத்தை தூண்டி செயற்பட்டால் சுயமாகத்தான் நன்மையடைவோம் மாறாக ஒட்டுமொத்த நாட்டுக்கு வருகின்ற வேவையிலிருந்து நாம் பாதிப்படைந்து தள்ளப்படுவோம். கடந்த கால அரசாங்கம் அவர்களது குடும்பங்கiளின் நலங்களை மாத்திரம் கருத்திற்கொண்டு செய்ற்பட்டு வந்துள்ளது. ஆனால் நல்லாட்சி அரசில் சர்வதேசம் மதிக்கத்தக்க தலைவர்கள் இருந்த செயற்பட்டு வருகின்றார்கள்.

எமது சொந்த நிலங்களுக்குச் செல்வதற்கு கடந்த அரசாங்கம் விடவில்லை தற்போது எமது நல்லாட்சி அரசு வடக்கு கிழக்கில் பல நிலப்பரப்புக்களை விடுவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது தமிழ் போசும் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எமது பிரதேசத்தில் எமது மக்கள் வாழாது ஏனைய இடங்களிலிருந்து வந்து இங்கு குடியேற்றப்படும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எமது மக்களுக்குரிய வீட்டு வசதிகள் இல்லை இந்நிலையில் வேறு மாகாணங்களிலிருந்து இங்கு வந்து குடியமர்த்துவது எவ்வாhறு ஏற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான செயற்பாடுகள் இனவாதமாகத்தான் நான் பார்க்கின்றோம்.

கடந்த காலத்தில் கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்காக வேண்டி அப்பகுதி மக்களை விடுவித்து செயற்படக்கூடாது அப்பகுதிக்கு நான் நேற்றயதினம் சென்று அங்குள்ள மக்களிடம் உரையாடினேன் அங்கு மக்களுக்கு வீட்டுதிட்டங்களையும், ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அங்குள்ள மக்கள் அரசியல் கட்சிகள் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றார்கள். சிறுபான்மை இன மக்களால் கொண்டு வந்த இந்த நால்லாட்சி அரசாங்கத்தில் எமது மக்கள் பாதிப்படைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எமது நிலங்கள் எவ்வாறு சூறையாடப் படுகின்றதோ  அதுபோன்றுதான் எமது கல்வியும் சூறையாடப்பட்டு வருகின்றது. மலையகத்தில் சிறுவர்கள் வேலைக்கமரத்தப்படுகின்றார்கள், சிறுவயத்தில் பேலியான பிறப்புச்சான்றிதழைப் பெற்று மட்டக்களப்பிலருந்து பலர் வெளிநாடு செல்கின்றார்கள். வடக்கில் யுத்தத்திற்குப் பின்னர் சிறுவர்கள் பெட்டிக்கடைகளில் வேலை செய்கின்றார்கள். இவ்வாறான விடையங்களை அடையாளம் க்ணடு எமது அரசாங்கம் தடுத்து நிறுதி செயற்பட்டு வருகின்றது.

கடந்த அரசாங்கம் முப்படைகளின் மூலம் வடக்கு கிழக்கு பகுதிகளில் போதைவஸ்த்து பாவனைகளை விஸ்த்தரித்து இருந்தது. பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ள கடைகளில் படையினரால் போதைவஸ்த்துக்கள் கொண்டு வந்து கொடுக்கப்பட்டு அவை பாடசாலை மாணவர்களுகன்கு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு எமது மாணவர்கள் அடிமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறான பல கடைகளை நாம் அடையாளம் கண்டு மூடியிரு;ககின்றோம். 

வடக்கு கிழக்கில் தீர்வுக்காக பலர் போராடி மடிந்துள்ளார்கள் எனவே தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினூடாக நாம் ஒரு சிறந்த தீர்வைப் பெறவேண்டும். இதனூடாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இவைகளுக்கெல்லாம் மக்களும் எந்த அரசியல் கட்சியின் பின்னால் நின்று செயற்பட வேண்டும் என்பதையும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.






























SHARE

Author: verified_user

0 Comments: