31 Aug 2017

ஆளுநரும் அதிகாரிகளும் அக்கறை எடுக்கவில்லை கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் பாதயாத்திரை

SHARE
தமது நியாயமான போராட்டம் தொடங்கி மூன்று மாதங்கள் நெருங்குகின்றபோதும் உயர் கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட எவரும் கவனத்தில் எடுக்காததால் தாம் இந்தப் பாதயாத்திரைப் பேரணியை தமது போராட்டத்தின் ஒரு வடிவமாக ஆரம்பித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை 29.08.2017 மாலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக தலைமை வளாகத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரைப் பேரணி ஏறாவூர் நகர சபை வரை சென்று பிரச்சாரத்துடன் முடிவுற்றது.

“இறுதி இரத்தத் துளி சிந்தும்வரை போராடுவோம்” எனும் முகப்பு வாசகத்தைப் பதித்துக் கொண்டு கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் அப்பல்கலைக் கழக நுழைவாயிலில் கறுப்புக் கொடி கட்டி, பந்தல் அமைத்து  5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 07.06.2017 அன்று தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்று ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இப்பொழுது 85 நாட்களைக் கடந்துள்ளது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பினை சரியான கால அளவுக்குள் நிறைவு செய்,  பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கமெராக்களை உடனடியாக அகற்று, மஹாபொல புலமைப் பரிசில் பிரச்சினையை உடனே நிவர்த்தி செய், விடுதிப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய், அசாதாரணமான வகுப்புத் தடையை நீக்கு என்பன உள்ளிட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் துவங்கியிருந்தனர்.
பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் செவ்வாய்க்கிழமை 29.08.2017 ஊர்வலமாக வந்தபொழுது மேற்படி கோரிக்கைகளைத் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோசமிட்டு சென்றனர்.

பாதயாத்தரைப் பேரணியின் இறுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் மாணவ பிரதிநிதிகள்  கருத்துத் தெரிவிக்கையில்@ கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நான்கு வருடங்களில் நிறைவு செய்யவேண்டிய  பட்டப்படிப்பு ஆறு வருடங்களில் நிறைவடைவதால் இரண்டு ஆண்டுகள் மேலதிகமாக வீணாக கால இழுத்தடிப்பு இடம்பெறுகிறது.

உரிய நேரத்தில் பரீட்சைகள் நடைபெற்று பெறுபேறுகளை வெளியிடுவதன் மூலம் நான்கு வருடங்களில் பட்டப்படிப்பினை மாணவர்கள் பூர்த்தி செய்ய முடியும்.

சிசிரீவி கமெராக்கள் மூலம் மாணவர்கள் அவதானிக்கப்படுவதனால் தமக்கு போதுமான சுதந்திரம் இல்லை. 

மாணவர்கள் நியாயமற்ற முறையில் இடைநிறுத்தப்படுகிறார்கள் நிருவாகம் மாணவர்களை பழிவாங்கும் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும்”
2ஆம் வருட மாணவர்களில் சிலருக்கு 08.08.2017 அன்றைய தினம் இடம்பெற்ற பரீட்சைகளில் தோற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாம் நிருவாகக் (ளுநயெவந) கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ளோம்.

அந்த ஆக்கிரமிப்;புப் போராட்டத்தின் விளைவாக எமக்கு மின்சார ஒளியும், நீர் விநியோகமும் தடைப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் இங்கு நடக்கும் முடிவுறாத, கவனம் செலுத்தப்படாத அநீதிகளுக்கெதிராகவே போராடுகிறோமேயன்றி தனிப்பட்ட யார் மீதும் பழி சுமத்தவில்லை, மேலும் இது சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவே எழுச்சியுடன் போராட்டம் முன்கொண்டு செல்லப்படுகின்றது என்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: