மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான தேச மகாசபைப் பொதுக்கூட்டம் திங்களன்று 26.06.2017 மேற்படி ஆலய முன்றலில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் கே.சிவகுருநாதன் தலைமையில் இடம்பெற்றது.
தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவம் வழமைபோன்று ஜுலை (ஆடி) மாதம் 16ம் திகதி கிரியைகள் இடம்பெற்று மறுநாள் (17.07.2017) காலை திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் ஓகஸ்ட் (ஆவணி) மாதம் 07ம் திகதி காலை 6 மணிக்கு திருவோண நட்சத்திரம் கூடிய சுப வேளையில் புண்ணிய தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.
இக்காலங்களில் மேற்படி ஆலயத்தை நாடிவரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை மஹோற்சவ காலங்களில் கதாப் பிரசங்கங்கள், கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment