செய்யப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உகரணங்கள் என்பன போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
மா.நடராசவின் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவ்வுதவிகள் யுத்தத்தினால் பாதிப்புற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அந்த வகையில் போரதீவுப் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 2 யுவதிகளுக்கு தலா ஒவ்வொரு தையல் இயந்திரங்களும், வெல்லாவெளி முதியோர் சங்கத்திற்கு 50 கதிரைகளும், வழங்கப்பட்டன.
மேலும் மண்முனை தென் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மேலும் 2 யுவதிகளுக்கு தலா ஒவொரு தையல் இயந்திரம், ஏறாவூர் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சகோதர முஸ்லிம் குடும்பம் ஒன்றிற்கு மிளகாய் மற்றும் அரிசி அரைக்கும், இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.
தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் அதிககளவு பணத்தை கடந்த யுத்தத்தினால் பாதிப்புற்று வாழ்வாதார ரீதியாக இன்னலுறும் மக்களின் மன்னேற்றத்திற்குப் பயன்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment