கிழக்கிலங்கை விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளனத்தினால் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் சிறுவர்களுக்கும் சேமிப்பு புத்தகங்கள்
கிழக்கிலங்கை விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளனத்தினால் சிறுவர்களிடத்தில் சேமிப்புப் பழக்கம் மற்றும் அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கோடு ஓந்தாச்சிமடம் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் சேமிப்பு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (29) ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 115 சிறுவர்களுக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 60 ஆயிரம் ரூபாய் வைப்பிடப்பட்ட சிறுவர் சேமிப்புப் புத்தகங்கள் மற்றும் 12 அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ஊக்குவிப்புப் பணம் என்பன வழங்கப்பட்டன.
அத்துடன் சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான எழுது கருவிகளும் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாணவர்களால் பஜனை, பஞ்சபுராணம், வரவேற்பு நடனம், அறநெறிக் கீதம், திருஞான சம்பந்தர் வரலாற்று நாடகம் மற்றும் சைவப்புலவர் சாந்தினி குணலோகிதாசனின் சொற்பொழிவும் இடம்பெற்றன.
ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயம் மற்றும் ஸ்ரீ சிவசக்தி ஆலயங்களின் நித்திய குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ வி. விஸ்வரூபன் குருவின் ஆராதனையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
0 Comments:
Post a Comment