இரவு தூக்கத்திற்குச் சென்ற குடும்பப் பெண்ணொருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மரணித்தவர் புதிய காத்தான்குடி - 03, சென்றல் வீதி, இரண்டாம் ஒழுங்கையில் வசித்து வந்த நயிமா (வயது 41) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது..
இப்பெண் தனது வீட்டுக் கடமைகளை முடித்துவிட்டு வழமை போன்று ஞாயிறு இரவு தூக்கத்திற்கு சென்றுள்ளார். எனினும், விடிந்த போதும் அவர் தூக்கத்திலிருந்து எழுந்திருக்காததால் உறவினர்கள் அவரை அவதானித்தபோது அவர் மரணித்து விட்டிருந்தது தெரியவந்திருக்கிறது.
அதன் பின்னர் சடலம் மீட்கப்பட்டு மரணம் தொடர்பான வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment