6 Jan 2016

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட பிரிவு 7ஆம் திகதி ஆரம்பம்

SHARE
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட பிரிவு வியாழக் கிழமை (07) ஆரம்பமாகும் என அதிபர் வெஸ்லியோ வாஸ் தெரிவித்தார்.
பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் காரமாகவே 7 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாகவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதனைப் போன்று மிக்கேல் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு புதன்கிழமை ஆரம்பமாகும் என்றும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறாத பாடசாலைகள் யாவும் திங்கட் கிழமை (04) ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் பாடசாலைகள் மாத்திரம் இவ்வருடம் முதலாம் தவணைக்காக 6 ஆம் திகதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: