சிறுவர்கள் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டியதன் அவசியம்;; குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் பேரணி, ஓட்டமாவடியில் புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை மாணவர்களும் கல்வித் திணைக்கள அதிகாரிகளும் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி மீண்டும் அப்பாடசாலையை வந்தடைந்தது.
இதன்போது மாணவர்களின் நிகழ்வுகள் மற்றும் தேசிய எழுத்தறிவு தினத்தையொட்டி பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

0 Comments:
Post a Comment