ஜப்பானில்
நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அந்நாட்டு
பாராளுமன்றம் ஷின்சோ அபேவை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது.
பாராளுமன்ற கீழ் அவையின் சிறப்புக்
கூட்டம் நேற்று(24) நடைபெற்றது. அப்போது புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான
வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் பதிவான 470 வாக்குகளில் 328
வாக்குகளைப் பெற்று அபே வெற்றி பெற்றார்.
இதுபோல மேலவையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு அமைச்சர்களை பிரதமர் தேர்வு செய்வார். இதையடுத்து, அந்நாட்டு பேரரசர் அகிஹிடோவின் அரண்மனையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை சகாக்களை அபே அறிமுகப்படுத்துவார். பாதுகாப்புத் துறை அமைச்சர் தவிர முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த அனைவரும் மீண்டும் புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக இருந்தபோதிலும், மந்தமான பொருளாதார நிலையிலிருந்து விடுபடுவதற்காக அபே மேற்கொண்ட நடவடிக்கையை அங்கீகரிக்கும் வகையில் மீண்டும் வெற்றி கிடைத்துள்ளதாக ஆளும் லிபரல் டெமாக்ரட்ஸ் மற்றும் கொமேய் கட்சி கூட்டணி தெரிவித்துள்ளது.
இதுபோல மேலவையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு அமைச்சர்களை பிரதமர் தேர்வு செய்வார். இதையடுத்து, அந்நாட்டு பேரரசர் அகிஹிடோவின் அரண்மனையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை சகாக்களை அபே அறிமுகப்படுத்துவார். பாதுகாப்புத் துறை அமைச்சர் தவிர முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த அனைவரும் மீண்டும் புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக இருந்தபோதிலும், மந்தமான பொருளாதார நிலையிலிருந்து விடுபடுவதற்காக அபே மேற்கொண்ட நடவடிக்கையை அங்கீகரிக்கும் வகையில் மீண்டும் வெற்றி கிடைத்துள்ளதாக ஆளும் லிபரல் டெமாக்ரட்ஸ் மற்றும் கொமேய் கட்சி கூட்டணி தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment