28 Nov 2014

ததேகூ ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ஆளும் கட்சியுடன் இணைவு

SHARE
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உறுப்பினர் வைரமுத்து தியாகராஜா ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார்.

இன்று (28) இடம்பெற்ற ஆலையடிவெம்பு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின் போது விசேட உரையாற்றிய அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் மூலம் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட வடிவேல் துஷ்யந்தன் சுகயீனம் காரணமாக உயிரிழந்த பின் கடந்த 2013ம் ஆண்டு அந்த வெற்றிடத்திற்கு தியாகராஜா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: