12 Feb 2024

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கிவைப்பு!!

SHARE

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் தலைவர் தொழிலதிபர் தேசபந்து எம்.செல்வராசா தலைமையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகோண் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.

இந்நிகழ்வில் 13 மாணவர்களுக்கு புலமைப் பாரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஒரு மாணவருக்கு மாதாந்தம் 6,000 ரூபா வீதம் 12 மாதங்களுக்கான புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கழகத்தின் செயலாளரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் பிரதி உப வேந்தருமான கே.கருணாகரன், கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: