19 Jan 2024

மட்டக்களப்பில் மீண்டும் மழை தாழ் நிலங்கள் வெள்ளத்தில்.

SHARE

மட்டக்களப்பில் மீண்டும் மழை தாழ் நிலங்கள் வெள்ளத்தில்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த இந்நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை(19.01.2024) அதிகாலை வேளையிலிருந்து மீண்டும் பலத்த மழை பொழியத் துவங்கியுள்ளது.

கடந்தவாரம் முதல் பெய்துவந்த பலத்த மழை வீழ்ச்சியால் தேங்கியுள்ள வெள்ள நீர் வற்றாத நிலையில் தற்போது வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்து மழை பெய்யத் துவங்கியுள்ளதனால் மீண்டும் வெள்ளநிலமை ஏற்பட்டுள்ளது.

மக்கள் குடியிருப்புக்களிலும், வீதிகளிலும், மீண்டும் மழைநீர் தேக்கமடைந்து வழிந்தோட முடியாத நிலமையையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் மழையுடன் ஓரளவு காற்றும் வீசிவருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில அமைந்துள்ள குளங்களின் நீர்மட்டங்களின் நிலமை தொடர்பிலும் பொறியியலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை(19.01.2024) காலை 7 மணிவரையில்

உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 31அடி 3அங்குலமும், உறுகாமம் உளத்தின் நீர்மட்டம் 13அடி 9அங்குலமும்,  வாகனேரிக் குளத்தின் நீரமட்டம் 18அடி 10அங்குலமும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 6அங்குலமும், கித்துள்வெவக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 2அங்குலமும், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 3அங்குலம், நவகிரிக்குத்தின் நீர்மட்டம் 29அடி 6அங்குலம், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி 3அங்குலமுமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க உன்னிச்சைப் பகுதியில் 3.5மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 17மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 26.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவு பகுதியில் 12 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 24 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















SHARE

Author: verified_user

0 Comments: