20 Jan 2024

மண்முனைப் பற்றில் நடைபெற்ற பொங்கல் விழா.

SHARE

மண்முனைப் பற்றில் நடைபெற்ற பொங்கல் விழா.

உழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா வெள்ளிக்கிழமை(19.01.2024)  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மண்முனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வளாகத்தில் வயல் அறுவடை  பாரம்பரிய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

 இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக கிளை ரீதியாக பல வகையான பொங்கல் பானைகளால் நிகழ்வை அலங்கரித்தமை ஒரு சிறப்பம்சமாகும்.

இதன்போது ஆன்மீக மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மண்முனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு மகேந்திரராசா ரஜீவன் அவர்களின் ஆசியுரையுடன்  நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்போது உதவிப் பிரதேச செயலாளர் திருமதிலோகினி விவேகானந்தராஜ்பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மனோரஞ்சனி ஜெயச்சந்திரன்கணக்காளர் வல்லிபுரம் நாகேஸ்வரன்நிருவாக உத்தியோகத்தர் சின்னத்துரை திவாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து மாவிலங் கன்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகள்உடுக்கு இசைபிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உழவர் பாடல்கிராமிய பாடல்என பல கலை நிகழ்வுகளும் பொங்கல் விழாவை சிறப்பித்ததிருந்தன.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மண்முனை பகுதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம்கிராம அபிவிருத்திச் சங்கம்மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்விளையாட்டுக் கழகம்முதியோர் சங்கம்மீனவர் சங்கம்ஹெயார் நுன்நிதிச் சங்கம் என பல அமைப்புக்கள் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






























SHARE

Author: verified_user

0 Comments: