3 Jul 2023

ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு 1265000 ரூபா பெறுமதியில் நிரந்தர கல்வீடு வழங்கி வைப்பு.

SHARE

ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு 1265000 ரூபா பெறுமதியில் நிரந்தர கல்வீடு வழங்கி வைப்பு.

ஜீவகாருண்யம் மிக்கவர்கள் இன்னும் நாட்டிலே பல்வேறு பட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குபட்பட்ட பலாச்சோலைக் எனும் கிராமத்தில் மூன்று பிள்ளைகளுடன் ஓலைக் குடிசையில் வசித்து வந்த சுந்தரலிங்கம் தரிசினி எனும் குடும்பத்திற்கு லண்டனில் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டுவரும் ஸ்ரீ லங்கன் பெமிலி செரண்டிப் பவுண்டேன் எனும் அமைப்பினால் 1265000 ரூபா பெறுமதியான நிரந்தர கல்வீடு ஒன்று அமைக்கப்பட்டு அதனை உரிய குடும்பத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (28.06.2023) இடம்பெற்றது.

இதன்போது ஸ்ரீ லங்கன் பெமிலி செரண்டிப் பவுண்டேன் அமைப்பின் தலைவர் குணரெட்ணம் ரகுலோட்சனன், உள்ளிட்ட அப்பகுதி மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஓலைக் குடிசையில் இருந்து கொண்டு தினமும் நாட்கூலி வேலை செய்து தமது குடும்பத்தைப் பார்த்து வந்த தமக்கு இவ்வாறு ஓர் நிரந்தர கல்வீடு கிடைக்கப்பெற்றமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. தமக்காக தாமாகவே முன்வந்து வீட்டை அமைத்து தந்த ஸ்ரீ லங்கன் பெமிலி செரண்டிப் பவுண்டேன் அமைப்பினருக்கு தமது ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சுந்தரலிங்கம் தரிசினி குடுபத்தினர் இதன்போது நன்றி தெரிவித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: