2 May 2023

தேசிய ரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு.

SHARE

தேசிய ரீதியில்  கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு.

இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கனிஷ்ட தேசிய கூடைப்பந்தாட்ட (பிரிவு- 2 ) சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் சாம்பியன் பட்டம்வென்ற மட்டக்களப்பு மாவட்ட 23 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினரைக் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஜெயன் பார்த்தசாரதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(30.04.2023) மட்டக்களப்பு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

இதன்போது இயேசுசபைத்துறவி வணக்கத்திற்குரிய அருட்தந்தை போல் சற்குணநாயகம், மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் டி.சி.ரொசாரியோ, பொருளாளர் எஸ்.சுதாகர், உபதலைவர் .பரணிதாசன், நிர்வாகசபை உறுப்பினர் சுரேஷ் ரொபட், மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மு.ராஜேந்திரா, செயலாளர் மு.து.பிரியேந்திரன், அணி பயிற்றுவிப்பாளர் .விவேக், மற்றும் அணி வீரர்கள் உள்ளிட்ட பலர்; இதன்போது கலந்து கொண்டிந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஜெயன் பார்த்தசாரதி…. 1996 ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அணியொன்று தேசிய ரீதியில் வெற்றி பெற்றுள்ளது பெருமையாகவுள்ளது. அதற்காக பாடுபட்ட  அணி வீரர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும் பாராட்டுகின்றேன். மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனம் சிரமங்களுக்கு மத்தியில் இயங்குகின்றது. நிதிப்பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக உள்ளதாகவும், இருப்பினும் மாவட்ட கூடைப்பந்தாட்ட துறையை இன்னும் முன்னேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட தமது குழாம் தயாராக இருக்கின்றது. கூடைப்பந்தாட்ட சம்மேளனத்துக்குரிய மைதானம், அலுவலகம் ஆகியன மிக அவசிய தேவை என இதன்போது தெரிவித்தார்.

அருட்தந்தை போல் சற்குணநாயகம் அவர்கள் உரையாற்றுகையில்…. மாவட்டத்தின் கூடைப்பந்தாட்ட பாரம்பரியத்தை எடுத்தியம்பியதுடன், கூடைப்பந்தாட்டம் மட்டக்களப்பின் அடையாளமாகும். முன்னைநாள் இயேசுசபைத் துறவிகளான Fr.Hebert, Fr.Webber ஆகியோரின் அர்ப்பணிப்புக்கள் மிகவும் பாராட்டத்தக்கதாகும். மேலும் வளர்ந்து வரும் வீரர்கள் மேலும் பயிற்சிகளை அதிகரிப்பதுடன், மேலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மேலும் வெற்றிகளை குவித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 











SHARE

Author: verified_user

0 Comments: