28 Nov 2022

க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகளின்படி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதாலாமிடம்.

SHARE

(கமல்) 

.பொ.  சாதாரணதர பரீட்சை முடிவுகளின்படி  கிழக்கு  மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதாலாமிடம்.

தற்போது வெளியாகியுள்ள .பொ.  சாதாரணதர பரீட்சை முடிவுகளின்படி  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதாலாமிடத்தை பெற்றுள்ளதாக மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்கள் தெரிவித்தார்.

வெளியாகிய பொறுபேற்றின் அடிப்படையில் மாகாண கல்வி திணைக்களத்தினால் வலய ரீதியாக  மேற்கொள்ளப்பட்ட  தரப்படுத்தலின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள 17  கல்வி வலயங்களிலும் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாமிடத்தினை பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் அவ்வலயத்தில் மொத்தமாக பரீட்சைக்கு தோற்றிய 2056 மாணவர்களின் 1789 போர் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதுடன் இதனுள் 128 மாணவர்கள் 9 சித்திகளைப் பெற்றுள்ளனர். மாறாக குறைந்தளவிலான 7மாணவர்களே எவ்வித பாடத்திலும் சித்தியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே குறித்த சாதனையை நிலைட்டுவதற்கு அயராது உழைத்த வலயக்கல்வி பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக மாகாண கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: