10 Nov 2022

மட்டு.மாவட்டத்தில் அடை மழை—பல வீதிகள் வெள்ளத்தில்-மக்களின் இயல்பு வாழ்ககை பாதிப்பு—48 மணிநேரத்தில் 96.9.மீ.மழை

SHARE

மட்டு.மாவட்டத்தில் அடை மழை—பல வீதிகள் வெள்ளத்தில்-மக்களின் இயல்பு வாழ்ககை பாதிப்பு—48 மணிநேரத்தில் 96.9.மீ.மழை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான அடை மழை பெய்து வருகின்றது. வியாழக்கிழமை  காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 96.9மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.

கடும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வீதிகள் உட்பட தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வாகரை புதிய காத்தான்குடி ஆரையம்கதி நாவற்குடா வாகரை கொக்கொடிச்சோலை உட்பட பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.









 

SHARE

Author: verified_user

0 Comments: