8 Oct 2022

இந்த நாட்டில் திருத்தச் சட்டங்களெல்லாம் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விருப்பங்களுக்காகவே அன்றி மக்களுக்காகக் கொண்டு வரப்படுவதில்லை - ஜனா MP

SHARE

இந்த நாட்டில் திருத்தச் சட்டங்களெல்லாம் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விருப்பங்களுக்காகவே அன்றி மக்களுக்காகக் கொண்டு வரப்படுவதில்லை - பாராளுமன்ற உறுப்பினர் -கோ.கருணாகரம் (ஜனா)

பாராளுமன்றத்தில்   வருகின்ற திருத்தச் சட்டங்களெல்லாம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அல்லாமல் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விரும்பங்களை நிறைவேற்றுவதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. அந்த அடிப்படையிலேயே 22வது திருத்தச் சட்டத்தின் விவாதமுமும் பிற்போடப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் நேற்றைய உரை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

22வது திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டிய இந்த நேரத்திலே ஜனாதிபதி அவர்களின் உரை சம்மந்தமான ஒத்திவைப்புப் பிரேரணையிலே பேசுகின்றோம். 22வது திருத்தச் சட்டம் ஒரு சிலரின் விருப்பதைப் பூர்த்தி செய்யாதமையினாலே அது இன்று சபைக்குக் கொண்டுவரப்படவில்லை எனக் கருதுகின்றேன்.

இதேபோல் தான் மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தங்களது தேவைக்காக அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றார்கள். இந்த அரசியலமைப்பில் 44 வருட காலத்திலே 2வது திருத்தச் சட்டம் முன்னாள் மட்டக்களபப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை அவர்களை அரச தரப்பிற்கு எடுப்பதற்காக அவரது உறுப்புரிமையைப் பறிப்பதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருக்கின்றது. 3வது திருத்தம் ஒரு ஜனாதிபதி ஆறு வருடங்கள் ஆட்சியில் இருக்கலாம் என்பதை மாற்றி அவரது ஆட்சிக் காலத்திலே நான்கு வருடத்தினுள் தேர்தலை நடத்தலாம் என்று கொண்டு வரப்பட்டது. 6வது திருத்தச் சட்டம் அப்போதைய தமிழர் விடுதலைக கூட்ணியின் பாராளுமன்ற உறுப்;பினர்களாக வந்தவர்களை இந்தச் சபையில் இருந்து துரத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 13வது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகப் பிறப்பிக்கப்பட்ட குழந்தை, 18வது திருத்தச் சட்டம் மஹிந்த ராஜபக்ச அவர்களின் அதிகாரத்தைப் பலப்படுத்தக் கொண்டு வரப்பட்டது. 19வது திருத்தச் சட்டம் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 20வது திருத்தச் சட்ட மீண்டும் கோட்;டபாய ராஜபக்சவின் அதிகார வெறிக்கு உரமூட்டிய சட்டம்.

ஆக மொதத்தில் இங்கு வருகின்ற திருத்தச் சட்டங்களெல்லாம் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விரும்பங்களை நிறைவேற்றுவதற்காகத் தான் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் தான் 22வது திருத்தச் சட்டமும் இந்தச் சபையிலே விவாதிக்கப்பட வேண்டிய நிலையிலே ஒரு சிலருக்காக இந்தச் சட்டம் இங்கே கொண்டு வரப்படாமல் இருக்கின்றது.

இந்தத் திருத்தச் சட்டங்களிலே பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஒன்றுதான் இலங்கையில் மக்களின் பிரச்சனைகளை ஓரளவேனும் தீர்ப்பததற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். நாங்கள் அதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவ்வாறு இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தைக் கூட இந்த நாட்டின் அரசுகள் அரசிலமைப்பினை மீறி கையாளுகின்றன. 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட இன்றுவரை முழுமையாக வழங்கப்படாமல் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்;களால் அரசியலமைப்பு இன்றுவரை மீறப்படுகின்றது.

ஜனாதிபதி அவர்களின் நேற்றைய உரை நாட்டின் யதார்த்தத்தைப் பிரதிபலித்தது. இன மத மொழி பேதமின்றி கட்சி அரசியல் பேதமின்றி நாடாக ஒன்;றிணைய வேண்டும் என்ற தொனி அவரது உரையில் தெரிந்தது. அதனை முழுமையாக நாங்கள் ஏற்கின்றோம். ஆனால் எமது ஒத்துழைப்பு உங்கள் காரியங்களை நிறைவேற்றுவதற்காக மாத்திரமா? என்கின்ற ஐயத்துடனான கேள்வி எங்களுக்குள் எழுகின்றது. நாட்டின் தலைமை வகித்தவர்களில் நல்லவராகக் காட்டக் கூடியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் எனக்கு ஐயமில்லை. அவர் ஜனாதிபதியாக வந்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அவர் ஜனாதிபதியாக வந்தது அரசியலமைப்பின் அடிப்படையிலேயே என்பதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

ஆனால், இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத் தேர்தல் வரலாற்றை உணர வேண்டும். கடந்த நல்லாட்சி என்ற அரசின் காலத்தில் நடந்த அரசியல் கோமாளித் தனத்தை உணர வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் உங்கள் பக்கமே எம் தமிழர்கள் இருந்தார்கள். 2010, 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தற்போதைய ஜனாதிபதி இருந்த பக்கமே எமது தமிழ் மக்கள் இருந்தார்கள். அது நாட்டைப் பிளவுபடுத்த அல்ல சுபீட்சப்படுத்தவே.

நல்லாட்சிக் காலத்தில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த செயலுக்காக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஒத்துழைத்து உங்களை மீண்டும் பதவியில் அமர்த்தியதில் கூடுதல் பங்காற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இந்த வரலாற்றை நீங்கள் என்றும் மறக்கக் கூடாது. உங்களது கடந்த கால வரலாற்றின் துயரங்கள் இனிமேலும் தொடரக் கூடாது. இந்த நாட்டில் புதிய அத்தியாயத்தைப் படைக்கக் கூடிய சுபீட்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஏன் உங்களது நீண்ட கனவு கூட இன்று நிறைவேறியுள்ளது. எனவே நிதானமாகச் செயற்படுங்கள்.

எமது நாட்டின் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவராக இருக்க வேண்டுமென்றால் இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைக்கு முக்கியமான காரணமாகவுள்ள புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு தீர்வைத் தாருங்கள்.

இன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகாhர அமைச்சர் அலிசப்றி அவர்கள் வீPரவசனங்கள் பேசிக் கொண்டிருக்கின்றார். இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவாக ஏழு நாடகளே ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அவை எந்த நாடுகள் சீனா, பாக்கிஸ்தான் போன்றவை. இந்த நாடுகளில் ஜனநாயகம் இருக்கின்றதா என்பதைப் பாருங்கள். இலங்கைக்கு எதிராகவுள்ள நாடுகளைப் பாருங்கள் அமெரிக்கா பிரித்தானியா போன்ற ஜனநாயகம் நிரம்பிய நாடுகள். அந்த நாடுகளிலே பல்மொழி பேசுகின்ற பல இன மக்கள் வாழுகின்றார்கள். அந்த மக்களுக்கான அதிகாhரங்கள் பரவலாக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த நாடுகள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேபோன்று இந்த நாடும் முன்னேற வேண்டுமானால் உங்களிடையே நல்லெண்ணம் உருவாக வேண்டும். பிரேரணைக்கு நடுநிலை வகித்த இந்தியாவைப் பின்பற்றிய நாடுகள் என்ன சொல்லுகின்றன. 13வது திருத்தச் சட்டத்தை முழு அதிகாரத்துடன் நிறைவேற்றுங்கள், மாகாணசபைத் தேர்தலை நடாத்துங்கள் என்றே கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் மக்கள் சபையொன்று இல்லாமல் இருக்கின்றது. மாகாண ரீதியில் இருக்கின்ற தொல்பொருள் திணைக்கம் மதவாதம், இனவாதம் கொண்டதாகவே இருக்கின்றது. கடந்த கோட்டபாய ஆட்சியிலே கிழக்கு மாகாணத்திலே உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணி என்ன செய்து கொண்டிருக்கின்றது. இந்தத் தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக எமது இந்து மதப் பாரம்பரிய புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கே முன்னாள் அமைச்சர்கள் நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களுக்கு இரத்தம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் கடந்த பாராளுமன்றத்திலே பேசியிருந்தார். ஆனால், அவர் எத்தனை தமிழர்களின் இரத்தங்களை வெளியில் எடுத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். தொல்பொருளுக்குப் பொறுப்பான அமைச்சர் கூறுகின்றார் எதுவும் நடக்காது என்று. ஆனால், தொல்பொருள் திணைக்களத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவினால் உருவாக்கப்பட்ட வியத்மக அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இந்த சரத் வீரசேகர போன்றவர்கள் வியத்மக அமைப்பில் இருந்து கொண்டு சம்மந்தப்படட அமைச்சருக்கே தெரியாமல் தொல்பொருள் திணைக்களத்துடன் தொடர்புகளை வைத்தக் கொண்டு இவ்வாறான வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களிலே எமது உயிர்நீத்த உறவுகளை நாங்கள் நினைவு கூருகின்ற போது போராட்ட வரலாற்றிலே இருந்த விமல் வீரவன்ச அவர்கள் புலிப்பயங்கரவாதிகளை நினைவு கூருகின்றார்கள். அவர்களைக் கைது செய்யச் சொல்லுகின்றார். ஆனால், அவரது தலைவர் ரோகண விஜயவீர உட்பட அவர்களது தோழர்கள் இறந்தமையை அவர்கள் இன்றும் நிpனைவுகூர்ந்து வருகின்றார்கள். ஆனால், எமது விடுதலைக்காகப் போராடியவர்களை நினைவு கூருபவர்களை கைது செய்யச் சொல்லுகின்றார்கள்.

இன்று பாராளுமன்றத்திலே கேள்வி பதில் விடயத்திலே ரோகண விஜயவீர அவர்கள் கடந்த 1989.12.12ம் திகதி பிடிபட்டதாகவும், 13ம் திகதி கொல்லப்பட்டதாகவும் அதற்கு யாரும் விவாசரணை கேட்கவில்லை என்று தோழர் விமல் விரவன்ச தெரிவித்தார். அவரிடம் நான் கேட்கின்றேன் அப்போது ரோகண வியஜயவீரவுடன் இருந்த நீங்கள் தான் அதற்கு நீதி கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: