19 Oct 2022

திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டடு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது.

SHARE

திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டடு வந்த  மூன்று  சந்தேக நபர்கள் கைது.

மட்டக்களப்பு கல்லடி ஆரையம்பதி போன்ற பிரதேசங்களில் பாரிய திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டடு. வந்த  மூன்று  சந்தேக நபர்கள் கைது

 செய்யப்பட்டுள்ளதுடன்.  அவர்கள் திருடிய மோட்டார் சைக்கிள்கள் சமையல்  எரிவாயு சிலிண்டர் போத்தல்கள் தங்க நகை என்பனவும்  மீட்க்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலீசார்  தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுணதீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் காத்தான்குடி போலிசார் மேலும் குறிப்பிட்டனர்

மட்டக்களப்பு கல்லடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில்  வீடுகள் உடைக்கப்பட்டு  திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி துமிந்த நயன சிறியின்  ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம. ரஹீம் தலைமையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த சந்தேக  நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் ஒரு தங்க சங்கிலி ஒரு துவிச்சக்கர வண்டி  மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவங்களுடன் மற்றுமொரு  சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும்  காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: