26 May 2022

கிழக்கில் ஜீவனோபாயத்திற்காக ஏங்கும் மீனவர்கள்-எரிபொருளின்றி மீன்பிடித் தொழில் முற்றாக செயலிழப்பு.

SHARE

கிழக்கில் ஜீவனோபாயத்திற்காக ஏங்கும் மீனவர்கள்-எரிபொருளின்றி மீன்பிடித் தொழில் முற்றாக செயலிழப்பு.

எரிபொருளின்மை காரணமாக குறிப்பாக மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டினால் கிழக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

மண்ணெண்ணெய் இன்மையால் தமது மீன்பிடி படகுகளைச் செலுத்த முடியாமலும் அதனால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாமலும் அல்லலுறுகின்றனர்.

இதனால் தமது மீன்பிடி படகுகள் அனைத்தையும் நீண்ட நாட்களாக கரையோரத்தில் மீனவர்கள் நிறுத்திவைத்துள்ளதுடன் பெரிய படகுகளை கடலின் நடுவே நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.

வாரத்தில் ஓரிருநாட்கள் வழங்கப்படும் எரிபொருள் தேவைக்கு போதாதுள்ளதாகவும் கொள்கலன்களில் எரிபொருள் தர எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவிப்பதாலும் தொடர்ந்தும் கடற்றொழில் நடடிவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மட்டக்களப்பு மாவட்த்தில் சுமார் 25 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: