1 Apr 2022

ஹக்கீமும் ரிசாட்டும் சர்வ கட்சி மாநாட்டை பகிஸ்காத்தமையானது முஸ்லிம்களுக்குச் செய்த பாரிய அநீதியாகும்.

SHARE

ஹக்கீமும் ரிசாட்டும் சர்வ கட்சி மாநாட்டை பகிஸ்காத்தமையானது முஸ்லிம்களுக்குச் செய்த பாரிய அநீதியாகும்.

ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் மக்கள் காங்கிரஜ் தலைவர் ரிசாட் பதியுத்தீனும் பகஸ்கரித்தமையானது வாக்களித்த மக்களுக்குச் செய்த பாரிய துரோகமாகும்.

இவ்வாறு சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சேமான்ய ஏ.எல்.எம்.மீராசாஹிபு திங்கட்கிழமை(28) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்

மக்களின் வாக்குகளைப் பெற்று பல பாராளுமன்ற உறுப்பினர்களை அலங்கரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும், நிட்சயமாக நடைபெற்று முடிந்த சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றியிருந்திருக்க வேண்டும். அதனை அவர்கள் பகிஷ்க்கரித்திருக்கக் கூடாது. அவர்கள் அவர்களது நிலப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு ஜனதிபதி அவரகள் களம் அமைத்துக் கொடுத்துள்ளார். நாடு அதள பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கும் இந்நிலையில் ஜனாதிபதி நீட்டும் நேசக்கரத்திற்கு பகிஷ்ஸ்க்கரிப்புச் செய்வதானது ஏற்றுக் கொள்ளமுடியாது. ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்மந்தன் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள்கூட அந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மாறாக ஏன் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் பகிஷ்க்கரிக்க வேண்டும்? தனிப்பட்ட ரீதியில் பகிஷ்க்கரிப்பதனால் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். எனவே ஜனாதிபதி நேசக்கரம் நீட்டும்போது மாநாட்டில் முஸ்லிம் கட்சிகள் கலந்து கொள்வது சிறப்பானதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: