3 Mar 2022

காசநோயினால் மட்டு.மாவட்டத்தில் 47பேர் மரணம் 398பேர் வைத்தியசாலையில் அனுமதி.

SHARE

காசநோயினால் மட்டு.மாவட்டத்தில் 47பேர் மரணம் 398பேர் வைத்தியசாலையில் அனுமதி.

மட்டக்களப்பு மாவட்ட்தில் கடந்த 3ஆண்டுகளில் காசநோய் காரணமாக 47பேர் மரணித்துள்ளதாகவும் இக்காலப்பகுதியில் 398 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மாவட்ட காசநோய் தடுப்பு வைத்தியதிகாரி டாக்டர்.கோணேஸ்வரன் ஆரணி தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு 147பேர் அனுமதிக்கப்பட்டு 17பேர் மரணித்ததாகவும், 2020இல் 127பேர் அனுமதிக்கப்பட்டு 19பேரும் 2021இல் 124பேர் அனுமதிக்கப்பட்டு 11பேருமாக 47பேர் இறந்துள்ளனர்.

உலக காசநோய் தினத்தையொட்டி மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனை நடாத்திய காசநோய் விழப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போதே இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் .உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பொது சுகாதார பரிசாதகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: